கொடியது என்ன?
எல்லையில்லா
கடலினுள் இறைத்தேட
காத்துக்கிடக்கும்
குருட்டு மீனின் தைரியத்துடன்
தினமும் தேடுகின்றேன்
உன்னை
காதல் அவ்வளவு
கொடியதா என்ன?
எல்லையில்லா
கடலினுள் இறைத்தேட
காத்துக்கிடக்கும்
குருட்டு மீனின் தைரியத்துடன்
தினமும் தேடுகின்றேன்
உன்னை
காதல் அவ்வளவு
கொடியதா என்ன?
உலகமயமாதலில்
ஊமையானதோ
என் இனிய இந்தியா?
மனிதயேயம் கூட
வியபாரம் ஆனதில்,
விருந்தோம்பல்
விம்மி அழுகின்றது
இன் நாட்டில்!
கிராமத்தை தொலைப்பதில்
குறியாக இருக்கின்றது
எங்கள் அரசு!
உணவு வேளையினை
மறக்க வைக்கும்
வேலைக்கு உணவு
திட்டம் !
போராளிகள் எல்லாம்
விசா எடுக்க
கடுமையான பயிற்சியில்!
தேவையானவைகள்
எல்லாம் தேவைக்கு
அதிகமாகவே இங்கு
கிடைப்பதில்லை!
குறைந்த பட்ச
அடிப்படை உடமைகள்
இங்கு நிறைவாகவே
குறைவானவர்களுக்கு!
பட்டினியினை உண்ணும்
எங்களுக்கு
ஏனோ தலைவர்கள்
சுதந்திர தினம் என்று
இனிப்பொன்றை
கொடுத்து எங்களின்
உலகசாதனையினை
முறியடித்துவிடுகின்றர்!
இந்தியாவில்
100 கோடிக்கும் மேல்
உடல்கள் உற்பத்தி
செய்யப்பட்டன !
தேசத்தை எமனின்
அந்தப்புரமாக்கிவிட்டனர்
பணம் படைத்த
இந்திரர்கள்!
இவ்வளவுக்கும்
மேலே நாங்கள்
இந்தியர்கள்!
இருந்தும்
அனைவருக்கும்
சுதந்திர தின
வாழ்த்துக்கள்!
என்னை
நிலைக்கண்ணாடியில்
காணும் எல்லா
தருணங்களிலும்
திகட்டாத இம்சையாக
எனக்குப் பின்னால்
நீ தெரிந்து
தொந்தரவு செய்கின்றாய்
தினமும்
இப்பொழுதாவது
காட்டு உன்
கண்ணாடி கண்னை
உன்னுள் இருக்கும்
என் முழுமையை
கண்டுகொள்கிறேன்.
இப்படி என்னை
பார்க்காதே என்கிறாயே?
நீயே சொல்.
பின் எப்படிதான்
உன்னை பார்ப்பதாம்!
வர்ணனைகள் கேளாத
சிலைகள் உண்டோ
பெண்ணே!
*
எதைக் காட்டி அழைத்தாயோ
தெரியவில்லை
தாய்முகம் கண்ட
சேய் போல்
உன்னை நோக்கி
தவழ்ந்தது
மனசு.
மடிந்தவைகளெல்லாம்
உன்னிடமிருந்து
பெறும்போது மட்டுமே
உயிர்த்தெழுகினறன
என் உதடுகள்
மட்டும் விதிவிலக்காயென்ன?
எந்த திசையிலிருந்து
பார்த்தாலும்
உன்னையே
ஞாபகப்படுத்துகின்றன
மண்னில் கறையும்முன்
என் நெஞ்சம் கொண்ட
ஆசையினைப் போல
தண்டினில் தொங்கிய
நீர்க்குமிழ்கள்
தேவதையே
உன் கால்கள்
விட்டு சென்ற
கடற்கறை சுவடுகளை,
மணலைவிடுத்து நான்
கைகளில் சேகரித்துக்கொண்டிருக்கின்றேன்!
எப்போதும் உன்னை
ஞாபகப்படுத்தும்
வைரமணிகள் கிடைத்த
சந்தோசத்தில்!
நீ தனியாக
அமர்ந்து
நம் நினைவுகளை
விழுங்கும் போதெல்லாம்
அன்பே!
விக்கல் எடுத்தே
வியர்த்து போகிறது
என் மனசு.
நீ தவறுகள் செய்யும்
பொழுதுகளிலெல்லாம்
எப்போதும் போல
இன்றும் மறந்து
என்னை உன் எச்சிலால்
நனைத்துவிட்டாய்
உன் நகங்களின்
இடுக்கினில்
வாழ்ந்துக் கிடப்பதுதான்
எவ்வளவு சுகம்.
விட்டு பிரியும்போதெல்லாம்
ஏனடி?
என் சிறகுகளை
திருடிக்கொள்கின்றாய்
நீ,
உன் வானத்தை
என்னிடம் தந்துவிட்டு!
உன்னை எங்கும்
சுமந்தே செல்கின்றேன்
கூட்டை தவிற்த்து
வாழ முடியாத
நத்தையினைப் போல
என்தன் செயல்களில்
உன்தன் சாயலை
தவிர்க்க முடியாமையும்
பாதையெங்கும் சுவடை
விட்டுச் செல்லும்
நத்தையினை போலத்தான்
நீயென்றாகிப்போன நான்
சுமந்துத் திறிகின்றேன்.
சொன்னால்
“நம்பமாட்டேன்”
என்கின்றாய்
முகம் திருப்பிக் கொண்டு!
முகர்ந்துப் பார்
கவிதையில்
உன் வாசம்
வருடிப்பார்
காகிதத்தில்
உன் பரிசம்
வாசித்துப்பார்
உன்னை நேசிக்கும்
என் இதயம்
நம்பிக்கை வரவில்லையா?
கசக்கி எறிந்துப்பார்
நான் இறந்துக்கிடப்பது
புரியும்.
______
ஏன்டீ என்னை இப்படி
இம்சை செய்கிறாய்?
நான் தந்த முத்ததில்
என்ன குறைக்கண்டாய்
திருப்பி வாங்கிக்கொண்டு
வேறொன்று தா என்று,
உன் விழியடியில்
கிரங்கிக் கொண்டிருக்கும்
இவனிடம், தலையனை கொண்டு
அடிக்கின்றாய்.
______
நீ கோபமாக
இருக்கின்றாய்.
சரி, பிறகென்ன
நீ முத்தம்
தந்து என்னிடம்
கெஞ்சுவாய்
இனிமேல்
இப்படி நடந்துகொள்ளமாட்டேன்
என்று.!
அதற்கேனடி
இவ்வளவு நேரமாக
காற்கவைக்கின்றாய் என்னை?
_______
மக்கு,
உன் தவறுகளில்,
சரியாக செய்ய
கற்றுத்தருபவள்
நான்.
அதற்காக
முத்தத்தை கூடவா
ஒழுங்காக இடமாட்டாய்?
____
உன் ஞாபகங்களுக்கு
அப்பால் நின்று
நனைந்து கொண்டிருக்கின்றது
என் மனசு
குடைக்கேட்டு
வரவில்லை
என் கவிதைகள்
உன்னிடம்
நீ சிந்திவிடும்
ஒவ்வொரு கண்ணீர்
துளியிடமும்
மன்னிப்புக்கேட்கத்தான்.
************